இம்பால்: மேகலாயா முதல்வர் கான்ராட் சங்மாவின் பாதுகாப்பு வீரர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேகலாயா முதல்வர் கான்ராட் சங்மா. அவரது பாதுகாப்பு வீரர்கள் அணியில் சாந்திகுமார் சிங் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் இம்பாலில் உள்ள 'கிளாசிக் கிராண்ட்' என்னும் ஓட்டலில் ஞாயிறு அதிகாலை 3.15 மணி அளவில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாநில முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.