ரயில்வே இணை அமைச்சர் ராஜென் கோஹன் மீது ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
ரயில்வே இணை அமைச்சர் ராஜென் கோஹன் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக அஸ்ஸாம் மாநிலம் நாகௌன் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் நாகௌன் சதார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, இந்திய தண்டனையியல் சட்டம் 417, 376 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக நாகௌன் காவல் கண்காணிப்பாளர் ஷங்கர் ராய் மேதி தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸிடம், 'இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்' என்றார்.