இந்தியா

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு: அனைத்து நீதிமன்றங்களுக்கும் அரைநாள் விடுமுறை

DIN

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி அனைத்து நீதிமன்றங்களுக்கும் அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் உடல் நலக்குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று மாலை காலமானார். இவரது மறைவுக்கு நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி அனைத்து நீதிமன்றங்களுக்கும் அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணி முதல் நீதிமன்றங்கள் இயங்காது என உச்ச நீதிமன்றம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT