இந்தியா

புதுச்சேரியில் அரசு அதிகாரிகளுக்கு ஆளுநர் வைக்கும் 'பரீட்சை' 

புதுச்சேரியில் அரசு அதிகாரிகளுக்கு அவர்கள் சார்ந்த துறை ரீதியான சட்ட விவரங்கள் தொடர்பாக தேர்வு நடத்தப்படும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

DIN

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு அதிகாரிகளுக்கு அவர்கள் சார்ந்த துறை ரீதியான சட்ட விவரங்கள் தொடர்பாக தேர்வு நடத்தப்படும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி  நாள்தோறும் துறை வாரியான ஆய்வுகளை நடத்தி வருகிறார். அந்த வரிசையில் புதுச்சேரி சமூக நலத்துறையில் அவர் வெள்ளியன்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில் புதுச்சேரியில் அரசு அதிகாரிகளுக்கு அவர்கள் சார்ந்த துறை ரீதியான சட்ட விவரங்கள் தொடர்பாக தேர்வு நடத்தப்படும் என கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெள்ளியன்று ஆய்வு முடித்து விட்டு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

அரசு அதிகாரிகள் அனைத்து துறைகளிலும் அவர்களின் துறை சார்ந்த சட்ட விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும். விரைவில் அதிகாரிகளுக்கு சட்ட விவரம் தொடர்பாக தேர்வு வைக்கபட உள்ளது. 

துறை சார்ந்த சட்டவிதிகளை அதிகாரிகள் கற்று அறிவது அவசியம். குறிப்பாக பல துறைகளிலுள்ள மூத்த அதிகாரிகளுக்கு சட்ட விவரங்கள் கண்டிப்பாக தெரிந்திருக்கவேண்டும். பலர் அதை அறிவதில்லை. இரு வார கால அவகாசம் தந்துள்ளேன். அதற்குள் தேர்வுக்கு அதிகாரிகள் தயாராக வேண்டும். 

அதிகாரிகளுக்கான தேர்வினை எனது தனிச்செயலர் ஸ்ரீதரன் நடத்துவார். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் அபிஷேக் சர்மா..! இஷான், பிரெவிஸ், ஃபர்ஹான் முன்னேற்றம்!

நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!

ஆப்கனில் மீண்டும் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவு!

மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டியில் விளையாடவுள்ளோம்; இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெடித்த மோதல்: ஜம்மு காஷ்மீர் கேப்டனுக்கு 50% அபராதம்?

SCROLL FOR NEXT