இந்தியா

தமிழகத்தில் இருந்து 500 கிலோ புகையிலைப் பொருட்கள் கடத்தியவர் கேரளாவில் கைது

ENS

தமிழகத்தில் இருந்து 500 கிலோ புகையிலைப் பொருட்கள் கடத்தி வந்தவர் கேரளாவில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் வளையாரு அருகே செல்புலச்சேரியில் உள்ள கிரிம்புழா பகுதியில் புகையிலைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலையடுத்து அங்கு போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது 500 கிலோ புகையிலைப் பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சிவதாஸ் (33) என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் ஒரு நான்கு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் கடத்தி வரப்பட்ட புகையிலைப் பொருட்கள் தமிழகத்தில் வாங்கப்பட்டு இங்கு 10 மடங்கு கூடுதல் விலையுடன் விற்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

SCROLL FOR NEXT