இந்தியா

மாட்டுத்தீவன ஊழல்: மூன்றாவது வழக்கிலும் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு! 

மாட்டுத்தீவன ஊழல் தொடர்பான மூன்றாவது வழக்கிலும் பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

DIN

பாட்னா: மாட்டுத்தீவன ஊழல் தொடர்பான மூன்றாவது வழக்கிலும் பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

பிகார் மாநில முதல்வராக 1990 முதல் 1997 வரையிலான காலகட்டத்தில் லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தார். அப்பொழுது கால்நடைத் தீவனம் வாங்கியதில் பெருமளவு ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் லாலு மீது சிபிஐ 5 வழக்குகளைப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இது தொடர்பான முதல் வழக்கில் 2013-ஆம் ஆண்டு லாலுவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட லாலு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஜாமீன் பெற்றார்.

இரண்டாவது வழக்கில் தியோகர் மாவட்ட அரசு கஜானாவில் இருந்து சட்டவிரோதமாக ரூ.89.27 லட்சம் பரிமாற்றம் செய்த வழக்கில், லாலு, மற்றொரு முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா உள்ளிட்ட 34 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் ஜெகன்நாத் மிஸ்ரா உள்ளிட்ட 6 பேர் விடுவிக்கப்பட்டனர். லாலு, 3 முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 16 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். லாலுவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலம் சாய்பாசா அரசு கருவூலத்தில் இருந்து 33.67 கோடி ரூபாய் முறைகேடான பணப் பரிமாற்றம் செய்ததாக லாலு உட்பட 76 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர்களில் 14 பேர் இறந்து விட்டனர். மூன்று பேர் அப்ரூவராக மாறினர். ஒருவர் இன்னமும் தலைமறைவாக உள்ளார். இவர்களை தவிர 56 பேர் மீது வழக்கு நடந்து வருகிறது.

இந்த வழக்கில் புதனன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில், லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என  நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவருக்கான தண்டனை விவரம் நாளை அறிவிக்கபபடலாமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக சிறப்பு பொதுக்குழு தொடங்கியது! கரூரில் பலியானோருக்கு மெளன அஞ்சலி!

ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு

வெற்றி உரையில் நேருவின் பேச்சை மேற்கோள்காட்டிய நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானி!

பிலாஸ்பூரில் சரக்கு ரயில்- பயணிகள் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு, 20 பேர் காயம்

பெண் தொழிலாளிகளின் குளியலறையில் ரகசிய கேமரா! வடமாநில இளம்பெண் கைது!

SCROLL FOR NEXT