மும்பை: தேநீர் விற்றவர் தற்போது பிரதமராகியுள்ளார் என்றால், அது காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஜனநாயகம் மிக நல்ல முறையில் காப்பாற்றப்பட்டுள்ளதையே காட்டுகிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவுக்கான காங்கிரஸ் பொதுச் செயலர் பொறுப்பு வகித்து வரும் மல்லிகார்ஜுன கார்கே, கட்சித் தொண்டர்களிடையே பேசுகையில் இவ்வாறு கூறினார்.
மோடி எப்போது பேசினாலும் அவர் மட்டுமே பேசுவார்கள். வேறு யாரையும் பேச அவர் அனுமதிப்பதில்லை. எங்களைப் பார்த்து அவர் கேட்கிறார் காங்கிரஸ் கடந்த 70 ஆண்டுகாலமாக என்ன செய்தது என்று. நான் கேட்கிறேன், நாங்கள் எதையுமே செய்யவில்லை என்றால், மோடி தற்போது எங்கே அமர்ந்துகொண்டிருப்பார்? ஒரு தேநீர் வியாபாரி பிரதமராக முடிகிறது என்றால், காங்கிரஸ் கட்சி, ஜனநாயகத்தைக் காப்பாற்றியுள்ளதே காரணம் என்று கார்கே கூறியுள்ளார்.
ஒவ்வொரு நாளும் ரயில்வே மேம்பாலங்கள் சரிவரும், ரயில்கள் தடம்புரள்வதுமாக இருக்கும் போது புல்லட் ரயில் எப்படி வரும் என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும். காங்கிரஸ் கட்சியை பெயில் காடி (ஜாமீன் வண்டி) என்று வர்ணிக்கும் மோடி, முதலில் தண்டவாளங்களை பராமரிக்க வேண்டும் என்று காட்டமாகக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.