இந்தியா

அக்னி-5 ஏவுகணை இன்று வெற்றிகரச் சோதனை

ஒடிஸாவில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து அக்னி-5 ஏவுகணை ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. 

Raghavendran

ஒடிஸாவில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து அக்னி-5 ஏவுகணை ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இன்று காலை சரியாக 9.48 மணியளவில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஏவுகணை 17 மீட்டர் நீளமும், 2 மீட்டர் அகலமும் கொண்டது. இதில் ஒரு டன்னுக்கும் அதிகமான எடை கொண்டதாகும். சராசரியாக 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்று தாக்கக் கூடியது.

இந்திய பாதுகாப்புத்துறையில் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் அக்னி-5 ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் கிலோ மீட்டர் வரை சென்று துல்லியமாகத் தாக்கக்கூடிய வகையில் அக்னி-6 ஏவுகணையை தயாரிக்கும் பணியில் டிஆர்டிஓ ஈடுபட்டுள்ளது.

தற்போது இந்தியாவிடம் அக்னி-1 (700 கிலோ மீட்டர் வரை சென்று தாக்கக்கூடியது), அக்னி-2 (2 ஆயிரம் கிலோ மீட்டர்), அக்னி-3 மற்றும் 4 (3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர்) அக்னி-5 (5 ஆயிரம் கிலோ மீட்டர்) மற்றும் சூப்பர்ஸானிக் பிரம்மோஸ் ரக ஏவுகணைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநாட்டுத் திடலில் குவிய ஆரம்பித்த தவெக தொண்டர்கள்! கழுகுப்பார்வை காட்சிகள்! | Vijay | Madurai

"நீ அரியணை ஏறும் நாள் வரும்": ஷோபா சந்திரசேகர் வாழ்த்து!

இந்தியாவுக்கு 5% தள்ளுபடியில் கச்சா எண்ணெய் விநியோகம் தொடரும்: ரஷியா அறிவிப்பு

தொடர்ந்து 4-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை! மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!!

தங்கம் விலை அதிரடியாக உயர்வு! எவ்வளவு?

SCROLL FOR NEXT