ரூர்கேலா: ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்குள் புகுந்த கொள்ளையர்கள், துப்பாக்கி முனையில் ரூ.45 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
இன்று காலை, வங்கிக்குள் புகுந்த அடையாளம் தெரியாத 7 பேர், வங்கி மேலாளரை துப்பாக்கி முனையில் மிரட்டி பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
பணத்தைக் கொள்ளையடித்த கொள்ளையர்கள், எந்த தடையும் இன்றி வங்கியில் இருந்து தப்பித்துச் சென்றனர். இது குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.