அராரியா: பிகார் மாநிலத்தில் சிறுவர்களை ஏற்றிக் கொண்டு வந்த கார், குளத்தில் விழுந்ததில் 6 சிறுவர்கள் பலியாகினர். ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
அராரியா மாவட்டத்தில் தரபாடி என்ற பகுதியில் சிறுவர்களை ஏற்றிக் கொண்டு வந்த கார், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த குளத்தில் கவிழ்ந்தது.
கார் கதவுகளைத் திறக்க முடியாததால், சிறுவர்கள் காருக்குள் சிக்கி உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து குறித்து தகவல் அறிந்து கிராம மக்கள் விரைந்து வந்து காரில் சிக்கியிருந்தவர்களை மீட்க முயன்றனர். ஆனால், அதற்குள் நீரில் மூழ்கி 6 சிறுவர்கள் பலியாகினர். ஒரு சிறுவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு, முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.