கோப்புப்படம் 
இந்தியா

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தற்காலிக ஒத்திவைப்பு

வரும் 27-ஆம் தேதி மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்ததால் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளனர்.

DIN

டீசல் விலையை குறைத்து 3 மாதங்களுக்கு ஒருமுறை விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் நாடு முழுவதும் கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்தது. சென்னை கோயம்பேட்டில் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தால் 20 சதவீதம் வரை காய்கறிகள் விலை உயர்ந்தது. 

இந்நிலையில், மத்திய அரசு லாரி உரிமையாளர்களுடன் வரும் 27-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளனர். இதனால், இந்த வேலை நிறுத்த போராட்டத்தை லாரி உரிமையாளர்கள் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“ரகசிய சந்திப்பு இல்லை! நேரடி சந்திப்புதான்!” நயினார் நாகேந்திரன் பேட்டி

புதினை சந்திக்க அனுமதி மறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் வித்தியாசமான படங்கள்!

5 முதல்வர்கள், 66 ஆண்டுகள்... தமிழ்த் திரைமுகம் ஏவிஎம் சரவணன்!

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவு சரியே! - திருப்பரங்குன்றம் வழக்கில் மதுரைக் கிளை உத்தரவு

SCROLL FOR NEXT