இந்தியா

ஜம்மு-காஷ்மீர் புதிய தலைமை செயலர் பதவியேற்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புதிய தலைமை செயலராக பி.வி.ஆர்.சுப்ரமணியம், சனிக்கிழமை பதவியேற்றார்.

Raghavendran

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புதிய தலைமை செயலராக பி.வி.ஆர்.சுப்ரமணியம், சனிக்கிழமை பதவியேற்றார்.

ஜம்மு-காஷ்மீரில் பிடிபி கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக திரும்பப் பெற்றது. இதனால் மெஹபூபா முஃப்தி முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து அங்கு ஆளுநர் ஆட்சியை அமல்படுத்தி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த உத்தரவிட்டார்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் புதிய தலைமை செயலராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி பி.வி.ஆர்.சுப்ரமணியம், சனிக்கிழமை பதவியேற்றுக்கொண்டார். கடந்த 1987-ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த இவர், கடந்த 2004 முதல் 2008 வரையிலான காலகட்டத்தில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்-இன் தனிச் செயலராக செயல்பட்டுள்ளார்.

இதுவரை ஜம்மு-காஷ்மீர் தலைமை செயலராக செயல்பட்டு வந்த பி.பி.வியாஸ், அம்மாநில ஆளுநர் வோஹ்ரா-வின் தனி ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் கூட ஆளுநரின் தனி ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

SCROLL FOR NEXT