புது தில்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் 11வது நாளாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின.
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்கு தேசம் உறுப்பினர்களும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக எம்பிக்களும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதே காரணத்தால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.