இந்தியா

தொழில்முறை கொள்ளையர்களாக இருந்த தில்லி காவலர்கள் இருவர் கைது

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் நகைக் கடையில் 9 கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில் தில்லி காவல்துறையைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

PTI


காஸியாபாத்: மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் நகைக் கடையில் 9 கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில் தில்லி காவல்துறையைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து உத்தரப்பிரதேச மாநில காவல்துறை உயர் அதிகாரி பிரஷாந்த் குமார் கூறுகையில், மார்ச் 18ம் தேதி, சாஹிபாபாத் ரயில் நிலையத்தில், காவல்துறை உடையில் இருந்த இரண்டு பேர் தங்க நகைகளைக் கொள்ளையடித்த வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகளைக் கைது செய்த தனிப் படையினரை பாராட்டினார்.

கைது செய்யப்பட்டவர்கள், தில்லி காவல்துறையில் காவல்துறை துணை ஆய்வாளர் சதேந்திர சிங் மற்றும் பிராம் பால் என்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் கொள்ளையடித்த நகைகளின் மதிப்பு ரூ.3 கோடி.

தில்லி காவல்துறையில் பணியாற்றும் இவர்கள் இரண்டு பேரும் தொழில்முறை கொள்ளையர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களிடம் இருந்து 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தங்க நகைகளை மொத்த விற்பனை செய்யும் வியாபாரி மூலமாக அதிக தங்க நகைகள் மீரட்டில் இருந்து தில்லி வரும் தகவல் அறிந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டதை இருவரும் ஒப்புக் கொண்டுள்ளனர். இதற்கு முன்பும் இதுபோன்ற இரண்டு கொள்ளைகளில் ஈடுபட்டதையும் அவர்கள் வாக்குமூலமாக அளித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

சிக்கிமில் தொடர் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!

மும்பையில் புதிய மேம்பாலம்: முதல்வர் ஃபட்னவீஸ் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT