முகப்பு
இந்தியா

திருநங்கைகள் பான் அட்டை பெற பாலினத்துக்கான ஆவணங்களை சமர்ப்பிக்கத் தேவையில்லை: ஐ.டி.

திருநங்கைகள், பான் அட்டை பெற பாலினத்துக்கான ஆவணங்களை தாக்கல் செய்ய தேவையில்லை என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

Updated On : 9 மே, 2018 at 3:01 PM
பகிர்:


புது தில்லி: திருநங்கைகள், பான் அட்டை பெற பாலினத்துக்கான ஆவணங்களை தாக்கல் செய்ய தேவையில்லை என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

பான் அட்டைக்கான விண்ணப்பத்தில், ஆண், பெண் மட்டும் அல்லாமல், திருநங்கை என்ற பாலினமும் இணைக்கப்பட்டது. நாட்டில் முதல் முறையாக ஏப்ரல் 10ம் தேதி இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டது.

இதையடுத்து, பான் அட்டை பெற விரும்பும் அல்லது தாங்கள் ஏற்கனவே வைத்திருக்கும் பான் அட்டையில் பாலினத்தை மாற்ற விரும்பும் திருநங்கைகள், திருநங்கை என்ற பாலினத்துக்காக எந்த ஆவணத்தையும் தாக்கல் செய்ய வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

NSDL அல்லது UTIITSL இணையதளங்களில் இருக்கும் விண்ணப்பங்கள் வாயிலாக திருநங்கைகள் புதிய பான் அட்டைக்கும், இருக்கும் பான் அட்டையின் பாலினத்தை மாற்றவும் எளிதாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.