இந்தியா

கரோல் பாக் ஆலையில் தீ: அவசர கால வழியில் பருமனான நபர் சிக்கியதால் 4 பேர் பலி

PTI


புது தில்லி: மத்திய தில்லியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இன்று நேரிட்ட தீ விபத்தின் போது அவசர கால வழியில் பருமனான நபர் சிக்கியதால் 4 பேர் தீயில் கருகி பலியாகினர்.

கரோல் பாக்கின் பிடோன்புரா பகுதியில் உள்ள துணிகளை துவைக்கும் தொழிற்சாலையில் இன்று மதியம் 12.23 மணியளவில் தீப்பற்றியது.

இதில், துணிகளைத் துவைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் கட்டடத்துக்குள் சிக்கிக் கொண்டனர். தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அவசர கால வழியில் பருமனான நபர் வெளியேற முயன்ற போது அவர் அதில் சிக்கிக் கொண்டார். இதனால் அவரும் வேளியேற முடியாமல், கட்டடத்துக்குள் இருந்தவர்களும் வெளியேற முடியாமல் 4 பேர் தீயில் கருகி உயிரிழந்ததாக தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

மழைச் சாரலிலும் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

கேரளத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!

பூவே.. செம்பூவே..!

SCROLL FOR NEXT