நவம்பர், டிசம்பரில் ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தொடும்: நிதித்துறை அமைச்சகம் எதிர்பார்ப்பு
வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மத்திய அரசுக்கான ஜிஎஸ்டி வரி வசூல் ஒரு லட்சம் கோடியைத் தொடும் என்று மத்திய நிதித்துறை அமைச்சகம் கணித்துள்ளது.
புது தில்லி: வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மத்திய அரசுக்கான ஜிஎஸ்டி வரி வசூல் ஒரு லட்சம் கோடியைத் தொடும் என்று மத்திய நிதித்துறை அமைச்சகம் கணித்துள்ளது.
விழாக் காலங்கள் என்பதால், வரும் மாதங்களில் ஜிஎஸ்டி வருவாய் நிச்சயம் ஒரு லட்சம் கோடி ரூபாயையைத் தொடும் எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசுக்கு வந்த சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி ரூ.94,442 கோடியாக இருந்தது. இது விழாக்காலங்களில் நிச்சயம் உயர்ந்து ஒரு லட்சம் கோடியைத் தொடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.