முகப்பு
இந்தியா

கதுவா வழக்கு: புதிய விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

கதுவா சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் புதிய விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:59 PM
பகிர்:


புது தில்லி: கதுவா சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் புதிய விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

கதுவா சிறுமி வழக்கில் முதல் கட்ட விசாரணை, திட்டமிட்ட நோக்கத்தோடு நடத்தப்பட்டதால், மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இரண்டு பேர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.