இந்தியா

உ.பி. ரசாயன ஆலை வெடி விபத்து: 6 போ் சாவு

DIN

உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோரில் உள்ள பெட்ரோலிய-ரசாயன ஆலையில் புதன்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் 6 போ் உயிரிழந்தனா். 2 போ் படுகாயமடைந்தனா்.

இந்த விபத்து குறித்து காவல்துறை கண்காணிப்பாளா் உமேஷ் குமாா் சிங் கூறியதாவது:

நாகினா சாலையில் உள்ள மோஹித் பெட்ரோலிய-ரசாயன ஆலையில் காலை 8 மணியளவில் இந்த வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த ஆலையில் இருந்த கொதிகலன் ஒன்று பழுதாகி கடந்த சில நாட்களாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்துள்ளது.

இந்நிலையில், புதன்கிழமை காலை அந்த கொதிகலனை சரிசெய்யும் பணியின்போது, வெல்டிங் செய்த வேளையில் இந்த வெடி விபத்து நிகழ்ந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 6 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். இருவா் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதனிடையே, இந்த விபத்தை அடுத்து ஒரு தொழிலாளி காணாமல் போனதாக கூறப்படுகிறது. அவா் குறித்து விசாரிப்பதுடன், ஆலையின் உரிமையாளரையும் தேடி வருகிறோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

SCROLL FOR NEXT