இந்தியா

ஜம்மு-காஷ்மீர் பயங்கரம்: பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 4 பேரில் 3 காவலர்கள் சுட்டுக் கொலை

DIN


ஷோபியான்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நேற்று இரவு காணாமல் போன 3 காவல்துறை உயர் அதிகாரிகள், 1 காவலர் என 4 பேரில் 3 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஷோபியான் மாவட்டத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த 3 காவல்துறை உயர் அதிகாரிகளும், 1 காவலரும் நேற்று இரவு மாயமாகினர். அவர்களை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

இந்த நிலையில், மாயமான 2 உயர் அதிகாரிகளும், 1 காவலரும் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களது உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் ஜம்மு காஷ்மீரில் எல்லைத் தாண்டி ஊடுருவி வந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரரைக் கடத்திச் சென்று சுட்டுக் கொன்றுள்ளனர். அவரது கழுத்தை அறுத்திருந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், இன்று காவல்துறையைச் சேர்ந்த 3 பேரை பயங்கரவாதிகள் கடத்தி சுட்டுக் கொன்றுள்ளனர்.

பயங்கரவாதிகளைத் தேடும் பணி ஷோபியான் மாவட்டத்தில் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT