இந்தியா

ம.பி. முதல்வர் கமல்நாத் தனிச்செயலர், அதிகாரிகளிடம் வருமானவரித்துறை சோதனை

மத்தியப்பிரதேச முதல்வர் கமல்நாத் தனிச்செயலர் மற்றும் அதிகாரிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.

DIN

மத்தியப்பிரதேச முதல்வர் கமல்நாத் தனிச்செயலர் மற்றும் அதிகாரிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.

கமல்நாத் தனிச்செயலர் பிரவீன் கக்கர், முன்னாள் ஆலோசகர் ஆர்.கே.மிக்லானி ஆகியோரது இந்தூர், போபால், கோவா மற்றும் தில்லி ஆகிய நகரங்களில் அமைந்துள்ள வீடு மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.

அதுமட்டுமல்லாமல் ஹிந்துஸ்தான் பவர் பிராஜட்ஸ் பி.லி. மற்றும் அமிரா குழுமம், மோசர்பேயர் குழுமம் உள்ளிட்ட நிறுவனங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் ம.பி. முதல்வர் கமல்நாத் உறவினர் ரதுல் பூரி, ஹிந்துஸ்தான் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். 

இதில் போபாலில் உள்ள பிரதீக் ஜோஷி வீட்டில் இருந்து ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சோதனைகளில் 300-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

மகனாக நடித்தவரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை!

SCROLL FOR NEXT