முகப்பு
இந்தியா

பாஜக தேர்தல் அறிக்கை திமிர் கொண்ட, குறுகிய பார்வை: ராகுல் ட்விட்டரில் தாக்கு

பாஜக-வின் தேர்தல் அறிக்கை தனிமைப்படுத்தப்பட்டவரின் குரலாக இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம்சாட்டினார். 

Updated On : 9 ஏப்ரல் 2019, 12:59 pm IST
பகிர்:

பாஜக-வின் தேர்தல் அறிக்கை தனிமைப்படுத்தப்பட்டவரின் குரலாக இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

மிகத்தீவிர கலந்தாய்வுகளுக்குப் பிறகு தான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது. இது இந்தியாவிலுள்ள 100 மில்லியன் மக்களின் குரலாக ஒலிக்கிறது. அதனால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மிகவும் சக்திவாய்ந்ததாக அமைந்துள்ளது. 

ஆனால், பாஜக தேர்தல் அறிக்கை வெறும் 4 சுவர்களுக்குள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தனிமைப்படுத்தப்பட்டவரின் குரலாக உள்ளது. மேலும் தேர்தல் அறிக்கை மிகவும் குறுகிய பார்வையுடனும், திமிராகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

முன்னதாக, 2014-ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைத்தபோது பொருளாதாரத்தில் இந்தியா 11-ஆவது இடத்தில் இருந்தது. ஆனால், தற்போது 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 

எனவே, ஏசி அறையில் உள்ளவர்களால் வறுமையை ஒழிக்க முடியாது. 6 கோடி மக்களிடம் ஆலோசிக்கப்பட்ட பிறகு தான் சங்கல்ப பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று பாஜக தேர்தல் வாக்குறுதி வெளியீட்டின் போது பிரதமர் மோடி விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments