இந்தியா

இந்தியாவின் மிக உயரிய வாக்குச்சாவடி மையம் எது தெரியுமா?

ANI

கடும் இடர்பாடுகளைத் தாண்டி நாட்டின் உச்சியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையம் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் அருணாச்சலப் பிரதேசத்தில் 60 சட்டப்பேரவை மற்றும் 2 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி நடைபெற்றது. இதில் சுமார் 66 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டிலேயே மிக உயரிய இடத்தில் தேர்தல் நடைபெற்ற பகுதி என்ற பெருமை அம்மாநிலத்துக்கு கிடைத்துள்ளது. அங்குள்ள லுகுதங் - முக்தோ சட்டப்பேரவைத் தொகுதிக்கான லுகுதங்க் கிராமத்தின் வாக்குப்பதிவு 13 ஆயிரத்து 583 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் நடத்தப்பட்டது. 

கடும் இடர்பாடுகளைத் தாண்டி மக்கள் வாக்களிக்க வசதியாக இங்குள்ள வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் சென்று பார்வையிட சுமார் 2 நாட்கள் ஆனதாக தேர்தல் அதிகாரி ஷேய்பாலி ஷரன் தெரிவித்தார். மொத்தம் 7,98,249 வாக்காளர்கள் உள்ள அம்மாநிலத்தில் 2,202 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT