இந்தியா

பயங்கரவாதத்துக்குப் பதிலடி கொடுக்க மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்: அமித் ஷா

DIN

பாகிஸ்தானுக்கும், பயங்கரவாதத்துக்கும் தக்க பதிலடி அளிக்க வேண்டும் என்றால் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.
கர்நாடக மாநிலத்துக்குள்பட்ட சிவமொக்கா மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ராகவேந்திராவை ஆதரித்து,  பத்ராவதியில் சனிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அமித் ஷா பேசியது: 
ராகவேந்திராவை சிவமொக்கா எம்.பி.யாக்குவதற்காக மட்டும் இந்தத் தேர்தல் நடைபெறவில்லை.  மோடியை பிரதமர் ஆக்குவதற்காகவும்தான். 
 மோடியை ஏன் மீண்டும் பிரதமராக்க வேண்டும்?  இந்தியாவை பாதுகாக்க வேண்டும்.  பாகிஸ்தானுக்கும்,  பயங்கரவாதிகளுக்கும் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.  இந்த இரண்டும் நிறைவேற மோடியை மீண்டும் பிரதமராக்க வேண்டும் என்கிறோம். 
பாகிஸ்தானுக்குத் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றால்,  பாஜகவை மக்கள் ஆதரிக்க வேண்டும்.  குஜராத் மாநிலத்தில் ஏப். 23-இல் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் காந்தி நகர் தொகுதியில் இருந்து நானும் போட்டியிடுகிறேன். ஆனாலும், ராகவேந்திராவின் வெற்றியை உறுதி செய்வதற்காகவே இங்கு வந்தேன் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT