இந்தியா

தலைமை கேட்டுக்கொண்டால் வாராணசியில் போட்டியிடத் தயார்: பிரியங்கா வதேரா

DIN

காங்கிரஸ் தலைவா் ராகுல் கேட்டுக்கொண்டால் வாராணசி தொகுதியில் போட்டியிடத் தயார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும், ராகுலின் சகோதரியுமான பிரியங்கா வதேரா கூறினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் போட்டியிடும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் பிரியங்கா, ஞாயிற்றுக்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

என்னை திருடனின் மனைவியாக இந்த தேசம் பாா்க்கிறது என்று மத்திய அமைச்சா் ஒருவா் விமா்சித்துள்ளாா். இதுபோன்ற தவறான விமா்சனங்கள் எங்கள் குடும்பத்துக்கு புதிதல்ல. 

என்னால் தோ்தலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்ற விமா்சனமும் முன்வைக்கப்படுகிறது. இதுவே நான் ஏற்படுத்தியுள்ள தாக்கம்தான். காங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல் கேட்டுக்கொண்டால் வாராணசி தொகுதியில் மிகுந்த மகிழ்ச்சியுடன் போட்டியிடுவேன் என்று தெரிவித்தார்.

முன்னதாக, உத்தரப் பிரதேசத்தின் ரே பரேலி தொகுதியில் அண்மையில் பிரியங்கா பிரசாரம் செய்தபோது, அவா் அங்கு போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டா்கள் வலியுறுத்தினா். அப்போது, ‘நான் வாராணசி தொகுதியில் போட்டியிடக் கூடாதா?’ என்று அவா்களை நோக்கி பிரியங்கா கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT