இந்தியா

காங்கிரஸை விமர்சித்த ஜேட்லியின் கடைசி ட்வீட் என்ன தெரியுமா?

சமூக வலைதளங்களில் எப்போதும் உயிர்ப்புடன் இருந்த அருண் ஜேட்லி, கடைசியாக காங்கிரஸ் கட்சி மீதான தனது விமர்சனத்தை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

DIN

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி (66), உடல்நலக் குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சனிக்கிழமை காலமானார். பாஜக-வின் மாணவர் பிரிவான ஏபிவிபி-யில் இருந்து படிப்படியாக மத்திய அமைச்சர் வரை உயர்ந்த ஜேட்லி மறைவுக்கு அனைத்து கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் உட்பட அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் எப்போதும் உயிர்ப்புடன் இருந்த அருண் ஜேட்லி, கடைசியாக காங்கிரஸ் கட்சி மீதான தனது விமர்சனத்தை ட்விட்டரில் பதிவு செய்திருந்தது தற்போது நினைவுகூரப்பட்டு வருகிறது. அதில்,

காங்கிரஸ் கட்சி தற்போது தலையில்லாமல் (தலைமை) செயல்பட்டு வருகிறது. அது நாட்டு மக்களிடம் இருந்து அக்கட்சியை மேலும் அந்நியப்படுத்தி வருகிறது. புதிய இந்தியா எப்போதோ பிறந்துவிட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சி அதனை இப்போது வரை உணரவில்லை. 

அதிலும், கடைசி இடத்துக்கு செல்லும் போட்டியில் காங்கிரஸ் கட்சி முனைப்புடன் செயல்பட்டு அதில் வெற்றியும் பெற்றுவிட்டது என காட்டமாக விமர்சித்திருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்திய பட்ஜெட் 2026 தாக்கல்..! - புகைப்படங்கள்

ஸ்ரீ செந்தில்முருகன், ஸ்ரீதா்மராஜா கோயிலில் மகா கும்பாபிஷேகம்

பட்ஜெட்டில் சிபிஐக்கு ரூ. 1,105 கோடி ஒதுக்கீடு!

நாடாளுமன்றம்: இரு அவைகளின் ஊழியர்கள், பராமரிப்புச் செலவுக்காக ரூ. 1,492 கோடி ஒதுக்கீடு

ஐடி, சிபிஐ வழக்குகளைக் காட்டி தேர்தல் கூட்டணி: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT