இந்தியா

முல்லைப்பெரியாறில் அணை கட்டும் பணியில் ஈடுபடவில்லை: உச்ச நீதிமன்றத்தில் கேரளா பதில்

DIN


புது தில்லி: முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டும் பணியில் ஈடுபடவில்லை என்று கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என தமிழகம் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் கேரள அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

பதில் மனுவில், முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டும் பணியில் ஈடுபடவில்லை, மாற்று அணை அமைப்பதற்கான தகவல்களை திரட்டும் பணியில் மட்டுமே தற்போது ஈடுபட்டுள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவதூறு வழக்கில் கேரள அரசின் பதிலை ஏற்று திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

வெளியானது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்!

அமலுக்கு வந்தது இ-பாஸ் நடைமுறை

ஜார்க்கண்ட் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்

SCROLL FOR NEXT