இந்தியா

மும்பை விமான நிலையத்தில் ரூ.7 கோடி தங்கம் பறிமுதல்!

DIN


மும்பை: மும்பை விமானநிலையத்தில் பயணி ஒருவர் மறைத்து எடுத்து வந்த ரூ.6 கோடியே 74 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபாயில் இருந்து மும்பைக்கு நேற்று மாலை வந்த விமான பயணிகளில் ஒருவர், அனுமதியின்றி தங்கம் கடத்தி வருவதாக வந்தத் தகவலின் பேரில், விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

அப்போது அவரது டிராலி பேக்கின் பக்கவாட்டில் தங்க கட்டிகளை மறைத்து தைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து டிராலி பேக்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்து 44 தங்க கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.6 கோடியே 74 லட்சம் என தெரியவந்தது.

இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள்தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் ஏவுகணைத் தாக்குதல்: 22 இந்திய மாலுமிகள் பயணித்த கப்பலுக்கு கடற்படை உதவி

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT