இந்தியா

அஸ்ஸாமில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோரின் எண்ணிக்கை 69 ஆக உயர்வு

DIN

அஸ்ஸாமில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோரின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது. 

அஸ்ஸாம் மாநிலம் கோல்ஹாட் உள்ள சல்மாரா தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நேற்று முன் தினம் கள்ளச்சாராயம் அருந்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து கள்ளச்சாராயம் குடித்த 100-க்கும் மேற்பட்டோருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. 

அவர்கள் அனைவரும் கோல்ஹாட் அரசு மருத்துவமனை உள்பட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில், பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தற்போது வரை இந்த சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்து உள்ளது. 

இது மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்து உள்ளனர். மேலும் சிலரையும் தேடி வருகின்றனர். இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக 2 கலால் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT