முகப்பு
இந்தியா

ஸ்ரீநகர் - முஸாஃபராபாத் பேருந்து சேவை மீண்டும் தொடக்கம்

புல்வாமா தாக்குதலையடுத்து, கடந்த வாரம் நிறுத்தப்பட்டிருந்த ஸ்ரீநகர் (ஜம்மு காஷ்மீர்) - முஸாஃபராபாத் (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்) இடையிலான பேருந்து சேவை திங்கள்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டது.

Updated On : 26 பிப்ரவரி 2019, 12:55 am IST
பகிர்:


புல்வாமா தாக்குதலையடுத்து, கடந்த வாரம் நிறுத்தப்பட்டிருந்த ஸ்ரீநகர் (ஜம்மு காஷ்மீர்) - முஸாஃபராபாத் (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்) இடையிலான பேருந்து சேவை திங்கள்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டது.
ஸ்ரீநகர்-முஸாஃபராபாத் இடையே அமைதிக்கான வாகனம் என்ற பெயரில் வாராந்திர பேருந்து இயக்கப்படுகிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையே நம்பிக்கையை கட்டமைக்கும் வகையில் கடந்த 2005-இல் இந்த சேவை தொடங்கப்பட்டது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில், பாகிஸ்தானின் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி கடந்த 14-ஆம் தேதி நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, கடந்த வாரம் திங்கள்கிழமை ஸ்ரீநகர்-முஸாஃபராபாத் பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் அந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஸ்ரீநகரிலிருந்து 13 பயணிகளுடன் முஸாஃபராபாத்துக்கு பேருந்து புறப்பட்டு சென்றது. அதில் பயணித்தவர்கள் அனைவரும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.