இஸ்லாமாபாத்: ஆளில்லா இந்திய உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள தகவலை இந்தியா மறுத்துள்ளது.
ஆளில்லா இந்திய உளவு விமானத்தை தங்கள் நாட்டு ராணுவப் படை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபார் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
பாகிஸ்தான் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே இந்தியாவின் ஆளில்லா குட்டி விமானம் ஒன்று பறந்து சென்றது. அதை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. எந்த ஒரு விமானத்தையும் எங்கள் பகுதியில் பறக்க அனுமதிக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால் இந்த தகவலை இந்திய ராணுவ வட்டாரங்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளன.