இந்தியா

ஜன. 25-இல் ராகுல் ஒடிஸா வருகை

DIN

ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்துக்கு 25-ஆம் தேதி வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளதாக அந்த மாநில காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
 முன்னதாக, ராகுல் காந்தி உரையாற்றவுள்ள அந்தக் கூட்டம் கட்டாக்கில் நடைபெறுவதாக இருந்த நிலையில், தற்போது புவனேசுவரத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவர் நிரஞ்சன் பட்நாயக் சனிக்கிழமை தெரிவித்தார். எனினும், கூட்டம் நடைபெறும் இடம் மாற்றம் செய்யப்பட்டதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை.
 இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 புவனேசுவரத்தில் உள்ள தமாண்டோ மைதானத்தில் வரும் 25-ஆம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றுகிறார். காலை 10 மணிக்கு ஒடிஸா வரும் ராகுல் காந்தி, பொதுக்கூட்டத்தில் பங்கேற்பது தவிர விவசாயிகள், சிவில் சொûஸட்டி உறுப்பினர்கள், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவன அதிகாரிகள், சிந்தனையாளர்கள் ஆகியோரை சந்திக்கிறார். பின்னர் மாலை 5 மணியளவில் தில்லி செல்கிறார்.
 பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால், கட்சித் தொண்டர்களிடையே அவர் உரையாற்றுவதற்கான தனிப்பட்ட நிகழ்ச்சிக்கான வாய்ப்பு இன்னும் உறுதி செய்யப்படவில்லை. பிப்ரவரி மாதத்திலும் ராகுல் காந்தி ஒடிஸா வரும் நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போது, மேற்கு மற்றும் தெற்கு ஒடிஸா பகுதிகளைச் சேர்ந்த மாவட்டங்களில் ஏற்பாடு செய்யப்படும் பொதுக்கூட்டங்களில் அவர் உரையாற்றுவார் என்று நிரஞ்சன் பட்நாயக் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT