இந்தியா

தில்லியில் பாஜகவுக்கு பாடம் புகட்டுவோம்

 நமது நிருபர்

வரும் மக்களவைத் தேர்தலில் தில்லியில் உள்ள ஏழு தொகுதிகளிலும் பாஜகவுக்கு ஆம் ஆத்மி கட்சி பாடம் புகட்டும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
வரும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தொகுதி வாரியாக ஆம் ஆத்மி நிர்வாகிகளை முதல்வரும், ஆம் ஆத்மிக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான கேஜரிவால் சந்தித்து வருகிறார். அந்த வகையில், கிழக்கு தில்லி நிர்வாகிகளை சனிக்கிழமை அவர் சந்தித்தார். அப்போது, கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியின் ஆம் ஆத்மி பொறுப்பாளர் அதிஷி, தில்லி ஆம் ஆத்மி அமைப்பாளர் கோபால் ராய் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்தக் கூட்டத்தில் கேஜரிவால் பேசியது:
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு தில்லியின் 7 மக்களவைத் தொகுதியிலும் ஆம் ஆத்மி தகுந்த பாடம் கற்பிக்கும். மத்தியில் ஆளும் அரசு ஊழலை ஒழிக்க எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே தில்லி அரசை இயங்க விடாமல் பல்வேறு விதமான முட்டுக்கட்டைகளை மத்திய அரசு போட்டு வருகிறது. ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் மீது பொய்யான வழக்குகளைப் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். என் மீதும் சிபிஐயை மத்திய அரசு ஏவியது. ஆனால், தில்லியில் சுகாதாரம், கல்வியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை நாங்கள் செயல்படுத்தியுள்ளோம்.
ஊழல் இல்லாத தில்லியை உருவாக்கிவிட்டோம். ஆனால், ஊழல் இல்லாத இந்தியா என்பது இன்னும் கனவாகவே உள்ளது. ஊழலை காங்கிரஸ் கட்சி ஆரம்பித்தது. அதை பாஜகவும் தொடர்கிறது.
கடந்த தேர்தலில் ஊழல் கட்சியான காங்கிரûஸ மக்கள் நிராகரித்தனர். ஆனால், மத்தியில் காங்கிரஸ் கட்சியை விட மோசமான மோடி- அமித் ஷா கூட்டணி ஆட்சிக்கு வந்துள்ளது. அவர்கள் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறும் வகையில் ஆட்சி செய்து வருகின்றனர். வரும் மக்களவைத் தேர்தலில் தில்லியில் உள்ள ஏழு தொகுதிகளிலும் பாஜகவுக்கு ஆம் ஆத்மி பாடம் புகட்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT