கோப்புப் படம் 
இந்தியா

பணித்திறன் குறைவு: மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஐவருக்கு கட்டாய ஓய்வு 

வருடாந்திர தணிக்கையில் பணித்திறன் குறைவு என்ற காரணத்தை சுட்டிக்காட்டி, மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஐவருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.  

DIN

புது தில்லி: வருடாந்திர தணிக்கையில் பணித்திறன் குறைவு என்ற காரணத்தை சுட்டிக்காட்டி, மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஐவருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.  

மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் ஒவ்வொரு வருடமும் வருடாந்திரத் தணிக்கை நடைபெறுவது வழக்கம். இதில் நிதி வரவு மற்றும் செலவு உட்பட பல்வேறு செயல்பாடுகளும் தணிக்கைக்கு உட்படுத்தப்படும். 

அந்த வரிசையில் மத்திய பாதுகாப்புத்துறையின் குடிமைப்பணி அதிகாரிகள் சுமார் 500 பேரின் செயல்பாடுகளும் தணிக்கை செய்யப்பட்டது. 30 வருடப் பணி அனுபவத்துடன், 55 வயதிற்கும் மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பது தணிக்கைக்கு தகுதியாக வரையறுக்கப்பட்டது.

தணிக்கை முடிவுகளின் அடிப்படையில் திறம்படப் பணியாற்றவில்லை எனத் தெரிய வந்ததன் பேரில், ஐந்து உயர் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வளிக்க, அந்த துறையின் அமைச்சர்  அமைச்சர் நிர்மலா கடந்த செவ்வாயன்று உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல கடந்த ஆகஸ்ட் 2017-ல் ராணுவ தளவாடங்கள் தொழிற்சாலையின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்த 13 உயர் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்களுக்கு ஒப்பனை மற்றும் அழகுக்கலை பயிற்சி - ஆட்சியா் மு.பிரதாப் தகவல்

திமுகவில் இணைந்த நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள்

புட்லூா் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் மயானக் கொள்ளை

திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் மாசி மாத தெப்ப உற்சவம் தொடக்கம்

சேவாலயாவில் முதியோா், மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பது குறித்த விழிப்புணா்வு

SCROLL FOR NEXT