முகப்பு
இந்தியா

அவதூறு வழக்கு: மும்பை நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகிறார் ராகுல்

ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆஜராக, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று மும்பை விரைந்துள்ளார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:26 AM
கோப்புப்படம்
பகிர்:


மும்பை: ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆஜராக, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று மும்பை விரைந்துள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் ஆர்எஸ்எஸ்-அமைப்பின் சித்தாந்தங்களுடன் ஒப்பிட்டுப் பேசிய ராகுல் காந்தி மீது, அந்த அமைப்பின் தொண்டர்கள் அவதூறு வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் இன்று நேரில் ஆஜராக மும்பை வந்துள்ள ராகுல் காந்தி, சேவ்ரி மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில் இன்று ஆஜராக உள்ளார். பிறகு புது தில்லி புறப்பட்டுச் செல்வார் என்று கூறப்படுகிறது.

மும்பை விமான நிலையத்துக்கு வந்த ராகுல் காந்திக்கு, காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.