இந்தியா

மழை பெய்து வருவதால் காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

DIN

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளிலிருந்து காவிரியில் கூடுதலாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

குடகு மாவட்டத்தில் பாகமண்டலா, சோம்வார்பேட்டை, மாதபுரா, ஷிராளி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

இதனால் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு வரும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த ஜூலை 1-ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 80.05 அடியாகவும், நீர்வரத்து விநாடிக்கு 771 கன அடியாகவும், வெளியேற்றம் விநாடிக்கு 330 கன அடியாகவும் இருந்தது. 

கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வியாழக்கிழமை விநாடிக்கு 2,598 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.   இது வெள்ளிக்கிழமை விநாடிக்கு 5,064 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 

வெள்ளிக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 2,907 கன அடியாக இருந்தது.  கிருஷ்ணராஜ சாகர் அணையின் மொத்த உயரம்-124.80 அடியாகும்.  தற்போதைய நீர்மட்டத்தின் அளவு- 90.73 அடியாக உள்ளது. அணையில் இருந்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 5,064 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

கபினி: மைசூர் மாவட்டம், எச்.டி.கோட்டை வட்டத்தில் கபிலா நதிக்கு குறுக்கே அமைந்துள்ள கபினி அணைக்கு வெள்ளிக்கிழமை நீர்வரத்து விநாடிக்கு 1,315 கன அடியாக இருந்தது. 

வியாழக்கிழமை இதன் அளவு விநாடிக்கு 1,644 கன அடியாக இருந்தது.  கபினி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியான கேரள மாநிலம், வயநாட்டில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணைக்கு வரும் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கபினி அணையின் மொத்த உயரம் (கடல்மட்ட அளவு)-2,284 அடியாகும். தற்போதைய நீர்மட்டத்தின் அளவு- 2,269.59 அடியாக உள்ளது.  

அணையில் இருந்து விநாடிக்கு 2,500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இது தமிழகத்துக்குப் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்
படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT