மும்பையில் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் கட்டடத்தில் 'திடீர்' தீ விபத்து
மும்பை பாந்த்ரா ப்குதியில் உள்ள டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் கட்டிடத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 60-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர்.
மும்பை: மும்பை பாந்த்ரா ப்குதியில் உள்ள டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் கட்டிடத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 60-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பாந்த்ரா பகுதியில் மாநில அரசுக்குச் சொந்தமான (எம்.டி.என்.எல்.) ஒன்பது மாடி டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் திங்கள் மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதுபற்றிய தகவல் அறிந்து 14 தீயணைப்பு வாகனங்கள் அங்கு உடனடியாக சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன
அந்த கட்டிடத்தின் மேல்தளத்தில் சிக்கியுள்ள 60-க்கும் மேற்பட்டோர்களை மீட்கும் பணியும் நடந்து வருகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.