முகப்பு
இந்தியா

மஹாராஷ்டிராவில் காங்கிரஸ் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் எம்.எல்.ஏ பதவியில் இருந்து ராஜிநாமா 

மஹாராஷ்டிராவில் காங்கிரஸ் முன்னாள் எதிர்கட்சித் தலைவரான ராதாகிருஷ்ண விகே படேல்   தனது எம்.எல்.ஏ பதவியினை ராஜிநாமா செய்துள்ளார்.

Updated On : 4 ஜூன் 2019, 3:31 pm IST
பகிர்:

மும்பை: மஹாராஷ்டிராவில் காங்கிரஸ் முன்னாள் எதிர்கட்சித் தலைவரான ராதாகிருஷ்ண விகே படேல்   தனது எம்.எல்.ஏ பதவியினை ராஜிநாமா செய்துள்ளார்.

மஹாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியில் முக்கியத் தலைவர் ராதாகிருஷ்ண விகே படேல். அஹமது நகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் முன்னாள் எதிர்கட்சித் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் ராதாகிருஷ்ண விகே படேல் தனது எம்.எல்.ஏ பதவியினை செவ்வாயன்று ராஜிநாமா செய்துள்ளார்.

Advertisement

Advertisement

அவர் தனது ராஜிநாமாவை சபாநாயகர் ஹரிபாபு பகாதேவுக்கு அனுப்பியுள்ளார். அத்துடன் அவர் விரைவில் பாஜகவில் சேர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு சற்று முன்னதாக அவரது மகனான சுஜய் விகே படேல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களைப் போல் மேலும் சில காங்கிரஸ் தலைவர்களும் பாஜகவில் சேர தயாராக உள்ளனர் என்று கூறப்படுகிறது. வரும் அக்டோபர் மாத மத்தியில் அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இது காங்கிரசுக்கு மேலும் சிக்கல்களை அதிகப்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments