இந்தியா

உத்தரப்பிரதேசத்தின் பார் கவுன்சிலுக்குத் தேர்வான முதல் பெண் தலைவர் சுட்டுக் கொலை

DIN


ஆக்ரா: உத்தரப்பிரதேசத்தின் பார் கவுன்சிலுக்கு தேர்வான முதல் பெண் தலைவர் என்ற பெருமையைப் பெற்ற தர்வேஷ் யாதவ் ஆக்ரா நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். 

ஆக்ரா நீதிமன்றத்தில் தனது நண்பரும், சக வழக்குரைஞருமான மணீஷ் ஷர்மா, தர்வேஷ் யாதவை துப்பாக்கியால் சுட்டார். 3 குண்டுகள் பாய்ந்த நிலையில் தர்வேஷ் ரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்தார்.

அடுத்த நொடியே, மணீஷ் ஷர்மா அதே துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டார். இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். வழியிலேயே தர்வேஷ் உயிரிழந்துவிட்டார். மணீஷ் ஷர்மா கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பிரயாக்ராஜில் ஜூன் 9ம் தேதி நடைபெற்ற பார் கவுன்சில் தேர்தலில் தர்வேஷ் யாதவ் முதல் பெண் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவரது நெருங்கிய நண்பராக இருந்தவர் மணீஷ் ஷர்மா என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT