இந்தியா

காஷ்மீர்: ஹிஸ்புல் ஆதரவாளர்கள் 5 பேர் கைது

DIN

ஜம்மு-காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில், ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள் 5 பேரை பாதுகாப்புப் படையினர் புதன்கிழமை கைது செய்தனர்.
இதுதொடர்பாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
ஆகிப் நஸீர் ரதார், அமீர் மஜீத் வானி, சமீர் அகமது பட், பைசல் ஃபரூக், ரயீஸ் அகமது ஆகிய 5 பேரும், ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகளுக்கு உதவிகள் செய்து வந்துள்ளனர். இதுதொடர்பாக கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். 5 பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், ஷோபியான் மாவட்டத்தில் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்த ஹிஸ்புல் பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதற்காக சக்திவாய்ந்த வெடிகுண்டை பயங்கரவாதிகள் தயாரித்ததும், அதற்கு 5 பேரும் உதவியதும் கண்டறியப்பட்டது. 
அந்த சக்திவாய்ந்த வெடிகுண்டை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த நடவடிக்கை மூலம் பயங்கரவாதிகளின் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்

போதை ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம்

SCROLL FOR NEXT