இந்தியா

ராணுவ தளபதி பிபின் ராவத்-க்கு 'பரம் விசிஷ்ட சேவா' பதக்கம்

DIN

ராணுவ தளபதி பிபின் ராவத்-க்கு 'பரம் விசிஷ்ட சேவா' பதக்கம் வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கௌரவித்தார். தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பாதுகாப்புத்துறைகளில் சாதனை படைத்தவர்களை கௌரவிக்கும் விதமான இவ்விருதுகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.  

ராணுவ வீரர் விரஹம பால் சிங் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் ராஜேந்திர ஜெயின் மற்றும் ரவீந்திர பப்பன் தன்வாடே ஆகியோருக்கு 'கீர்த்தி சக்ரா' பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

மேலும் ராணுவம் மற்றும் பாதுகாப்புப்படையைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் அதிகாரிகள் 12 பேருக்கு 'ஷௌர்ய சக்ரா' பதக்கம் வழங்கி கௌரவித்தனர். இந்த நிகழ்ச்சியில் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT