இந்தியா

ஃபானி புயல் காரணமாக ஒடிஸாவில் மட்டும் நீட் தேர்வு ஒத்திவைப்பு

PTI


புது தில்லி: வங்கக் கடலில் உருவாகி நேற்று ஒடிஸா மாநிலம் புரி அருகே கரையைக் கடந்த ஃபானி புயல் காரணமாக நாளை நடைபெறவிருந்த நீட் தேர்வு அம்மாநிலத்தில் மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

ஒடிஸாவில் தற்போது மீட்புப் பணிகளும் நிவாரணப் பணிகளும் நடந்து வருவதால் நீட் தேர்வை ஒத்திவைக்குமாறு மாநில அரசு விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மறு தேர்வு எப்போது நடத்தப்படும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் கோடை மழை 83 சதவீதம் குறைவு

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

SCROLL FOR NEXT