இந்தியா

எஸ்சி, எஸ்டி சட்டத்தில் கட்டாய மரண தண்டனை பிரிவுக்கு எதிரான மனு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்

DIN


தாழ்த்தப்பட்டோர் (எஸ்சி), பழங்குடியினருக்கு (எஸ்டி) எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் உள்ள கட்டாய மரண தண்டனை பிரிவை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
போலியான ஆதாரங்களின் அடிப்படையில்  ஏதேனும் ஒரு வழக்கில் தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, அது நிறைவேற்றப்படும் சூழலில், அவருக்கு எதிராக போலி ஆதாரங்கள் அல்லது பொய் சாட்சி அளித்த நபருக்கு கட்டாய மரண தண்டனை விதிக்க எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் 3 (2)ஆவது பிரிவு வழிவகை செய்கிறது.  இப்பிரிவை ரத்து செய்யக் கோரி, ரிஷி மல்ஹோத்ரா என்ற வழக்குரைஞர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கட்டாய மரண தண்டனை என்பது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பதையும் அவர் தனது மனுவில் சுட்டிக் காட்டியுள்ளார். இந்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, எஸ்.அப்துல் நஸீர் ஆகியோர் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக் காற்றுடன் கனமழை: பசுமைக் குடில்கள் சேதம்

அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

கிருஷ்ணகிரியில் இடியுடன் மழை: மின் விநியோகம் பாதிப்பு

திமுக இளைஞரணி சாா்பில் தண்ணீா்ப் பந்தல்கள் திறப்பு

வீடு புகுந்து ஆசிரியரை கத்தியால் குத்தி 8 பவுன் நகை பறிப்பு: போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT