இந்தியா

பிஎச்டி படிக்க ரூ.1 கோடி ஸ்காலர்ஷிப்: துப்புரவு தொழிலாளியின் மகள் சாதனை

DIN


சாதனை.. இந்த வார்த்தை அவ்வளவு எளிதில் கிட்டிவிடாது. பல வேதனைகளைத் தாண்டித்தான் சாதனைகள் படைக்கப்படுகின்றன.

பல சாதனைகளுக்குப் பின்புலத்தில் வேதனைகளின் கதைகள் ஏராளமாக இருக்கும். அந்த வகையில், இன்று நாம் பார்க்கவிருக்கும் சாதனையாளர் புது தில்லியை தூய்மையாக வைத்துக் கொள்ளும் பணியை மேற்கொண்டு வரும் துப்புரவு தொழிலாளியின் மகள் ரோஹிணி காவ்ரி. 

மிக ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த ரோஹிணி எம்பிஏ முடித்துவிட்டு வெளிநாடு சென்று பிஎச்டி படிக்க விரும்பினார். அவரது விருப்பத்தை சொன்ன போது, அக்கம் பக்கத்தினர், அவரது பெற்றோரை கேலி செய்தனர். மகளுக்கு காலாகாலத்தில் திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் பிறகு யாருமே திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்று.

ஆனால் வானமே எல்லை என்பதில் துப்புரவுத் தொழிலாளிக்கு எந்த சந்தேகமும் இல்லை. தற்போது ரோஹிணிக்கு வெளிநாடு சென்று பிஎச்டி படிக்க ரூ.1 கோடிக்கு ஸ்காலர்ஷிப் கிடைத்துள்ளது.

இந்த விஷயத்தை இனிப்போடு கொண்டாடி வரும் குடும்பத்தினர், சாதனைக்கு ஏழ்மை ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்

போதை ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம்

SCROLL FOR NEXT