இந்தியா

ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர், நிதின் கட்கரி 'திடீர்' சந்திப்பு

பிரதமர் பதவிக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் பெயரும் சமீபகாலங்களில் பரிசீலிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

ANI

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தொடர்பாக பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவார் என்று குறிப்பிட்டுள்ளது. சிலவற்றில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்றுள்ளது.

ஆனால், இந்த முடிவுகள் எதுவும் இறுதியானது கிடையாது. இருப்பினும் இதன் பிரதிபலிப்பு தேர்தல் முடிவுகளில் வெளிப்படும். பிரதமர் மோடியின் தலைமையில் தான் இந்த தேர்தலை சந்தித்துள்ளோம். எனவே மீண்டும் அவரது தலைமையில் தான் ஆட்சி அமையும். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். 

கடந்த 5 ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட வளர்ச்சித் திட்டங்களுக்காக மக்கள் மீண்டும் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைய வேண்டும் என்று விரும்புகின்றனர். இதன் வெளிப்பாடு தான் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் என்றார்.

இந்நிலையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உடன் ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் பையன்ஜி ஜோஷி, நாக்பூரில் திங்கள்கிழமை திடீரென சந்தித்துப் பேசினார். பிரதமர் பதவிக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் பெயரும் சமீபகாலங்களில் பரிசீலிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடதமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! தேவையான ஆவணங்கள் என்ன?

இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

சுங்கச் சாவடி கட்டண விவகாரம்: போக்குவரத்துக் கழக அதிகாரி பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT