இந்தியா

முதல் முறையாக 2 இந்தியர்களுக்கு யுஏஇ 10 ஆண்டு விசா

DIN


திறமையாளர்களையும், முதலீட்டாளர்களையும் கவரும் வகையில் ஐக்கிய அரபு அமீரகம் அறமுகப்படுத்தியுள்ள 10 ஆண்டுகளுக்கான சிறப்பு நுழைவு இசைவு (விசா), இந்தியாவைச் சேர்ந்த இருவருக்கு முதல் முறையாக வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
வெளிநாடுகளைச் சேர்ந்த திறமை வாய்ந்த மாணவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களையும், தொழிலதிபர்களின் முதலீடுகளையும் கவரும் வகையில், தங்கள் நாட்டில் 10 ஆண்டு காலம் தங்கியிருப்பதற்கான புதிய விசா முறையை ஐக்கிய அரபு அமீரகம் கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தியது.
எனினும், அந்த திட்டத்தின்படி அரபு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், மருத்துவத் துறை நிபுணர்களுக்கு மட்டுமே இதுவரை விசாக்கள் வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், இந்தியாவைச் சேர்ந்த இரு தொழிலதிபர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் 10 ஆண்டு கால விசா தற்போது வழங்கப்பட்டுள்ளது.
ரீகல் குழும நிறுவனங்களின் தலைவர் வாசு ஷெராஃப், குஷி குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் குஷி கட்வானி ஆகிய அந்த இருவரும்தான் நீண்ட கால விசா பெறும் முதல் இந்தியர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலீடுகளையும், திறமைசாலிகளையும் கவரும் வகையில் தங்கள் நாட்டில் நிரந்தர குடியுரிமை வழங்கும் தங்க அட்டை திட்டத்தை ஐக்கிய அரபு அமீரகம் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்துள்ள நிலையில், நீண்ட கால விசா திட்டத்தின்கீழ் இரு இந்தியர்கள் அழைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

அணியை சரிவிலிருந்து மீட்ட வெங்கடேஷ் ஐயர்; மும்பைக்கு 170 ரன்கள் இலக்கு!

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

SCROLL FOR NEXT