இந்தியா

தோற்றவர்கள் எல்லாம் தோல்வியாளர்கள் அல்ல: மம்தா பானர்ஜி

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

PTI


கொல்கத்தா: மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

அதே சமயம், மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து கட்சி தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மம்தா பானர்ஜி கூறுகையில், வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை எண்ணி முடிக்கும் வரை காத்திருப்போம். வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகள். ஆனால் தோல்வியடைந்தவர்கள் யாரும் தோல்வியாளர்கள் அல்ல என்று தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மதியம் 2 மணி நிலவரப்படி, மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 22 தொகுதியிலும், பாஜக 19 தொகுதியிலும், காங்கிரஸ் 1 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூவத்தூரில் நடந்தது என்ன தெரியுமா? இபிஎஸ் குறித்து உண்மையை உடைத்த தினகரன்!

மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக்கடன் திட்டம்: பிகார் அரசு!

வங்க தேசத்தில் குவிக்கப்படும் அமெரிக்க ராணுவம்! காரணம் என்ன?

ஆம்பூர் இளைஞர் கொலை: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் கைது!

நாடு கடத்தப்படத் தயாராக இருங்கள்: கிர்க்கின் கொலையைக் கொண்டாடும் வெளிநாட்டவருக்கு அமெரிக்க செயலர் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT