இந்தியா

எவ்வளவு பெரிய வெற்றியானாலும் மோடி இதை மட்டும் செய்ய முடியாது: பரூக் அப்துல்லா சவால் 

IANS

ஜம்மு: எவ்வளவு பெரிய வெற்றியானாலும் பிரதமர் மோடி இதை மட்டும் செய்ய முடியாது என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஆறு தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி மூன்று இடங்களிலும், பாஜக மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. தேசிய மாநாட்டுக் கட்சித்   தலைவர் பரூக் அப்துல்லா, தான போட்டியிட்ட ஸ்ரீநகர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில் எவ்வளவு பெரிய வெற்றியானாலும் பிரதமர் மோடி இதை மட்டும் செய்ய முடியாது என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜம்முவில் வெள்ளியன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர்  கூறியதாவது:

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளில் மோடி எவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும் சரி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து அவரால் அரசியல் சட்டப்பிரிவுகள் 35A மற்றும் 370 -ஐ நீக்கவே முடியாது.

காங்கிரசின் தேர்தல் தோல்வி குறித்துக் கேட்கப்பட்ட போது, 'காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டிப்பாக ஐந்து வருடங்களுக்குப் பிறகு அமேதியில் ஜெயித்து மீண்டெழுந்து வருவார்' என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

SCROLL FOR NEXT