இந்தியா

டேங்கர் லாரி மீது கார் மோதல்: 4 பேர் சாவு

DIN

நின்றிருந்த டேங்கர் லாரி மீது கார் மோதியதில் 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
கேரள மாநிலம்,  கண்ணூர் மாவட்டம், தலச்சேரி வட்டத்தைச் சேர்ந்தவர் கிரண் (30),  இவரது மனைவி ஜென்சி (27)  மற்றும் ஜெய்தீப் (29),  இவரது மனைவி ஞானதீர்த்தா (26) ஆகியோர் காரில் பெங்களூருக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.  சுற்றுலாவை முடித்துக் கொண்டு,  வியாழக்கிழமை தங்கள் சொந்து ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். 
மண்டியா மாவட்டம்,  மத்தூர் அருகே பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலை கொப்பா சதுக்கத்தில் இரவு 11.30 மணியளவில் சாலையோரம் நின்றிருந்த டேங்கர் லாரி மீது கார் மோதியுள்ளது.  இதில் காரிலிருந்த கிரண், ஜென்சி, ஜெய்தீப், ஞானதீர்த்தா ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து மத்தூர் போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா

3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

வித்யா குரு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

துளிகள்...

SCROLL FOR NEXT