இந்தியா

அயோத்தி தீர்ப்பு: தொலைகாட்சி சேனல்களுக்கு மத்திய அரசு அறிவுரை

அயோத்தி தீர்ப்பு குறித்த தொலைகாட்சி சேனல்களில் வெளியிடும் செய்திகள், விவாதங்களின் போது, விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க

DIN


புதுதில்லி: அயோத்தி தீர்ப்பு குறித்த தொலைகாட்சி சேனல்களில் வெளியிடும் செய்திகள், விவாதங்களின் போது, விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்தது. 

அதில், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம். முஸ்லிம்களுக்கு தனியாக 5 ஏக்கர் நிலத்தை உத்தரபிரதேச மாநில அரசு வழங்க வேண்டும். சர்ச்சைக்குரிய இடத்தை மத்திய அரசு கட்டுப்பாட்டில் வைத்து, கோயில் கட்டுவதற்கு தனியாக அறக்கட்டளை உருவாக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. பல ஆண்டுகளாக நடந்து வந்த அயோத்தி வழக்கு இன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்று தீர்ப்பு மூலம் தீர்க்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து தொலைகாட்சி சேனல்களில் வெளியிடும் செய்திகள், விவாதங்களின் போது, விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அனைத்து தொலைகாட்சி மற்றும் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT